புதிய பிளஸ்டூ தேர்வு முறைக்கு பாமக எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தமிழக அரசின் புதிய பிளஸ்டூ தேர்வு முறையை கைவிடக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் செப்டம்பர்15ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
தர்மபுரி அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரசின் புதிய பிளஸ்டூ தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி பாமக சார்பில் விளக்க நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் பாமகவினர் நோட்டீஸ்களை கொடுத்தனர். பின்னர் மணி கூறுகையில், பிளஸ்டூ புதிய தேர்வு முறை மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இத் தேர்வு முறையைக் கைவிடக் கோரி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
செப்டம்பர் 15ம் தேதி மாவட்ட கல்வி அலுலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
ஏற்கனவே நுழைவுத் தேர்வு ரத்த முடிவால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புதிய பிளஸ்டூ தேர்வு முறையை அமல்படுத்தினார் கிராமப்புற மாணவர்கள் மேலும் பாதிக்கப்படுவர் என்றார் மணி.












Click it and Unblock the Notifications