கவர்ச்சி ஆடை சர்ச்சை: பதிலளிக்க சானியா மறுப்பு
ஹைதராபாத்:
கவர்ச்சி ஆடைகளை அணிந்து போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக இஸ்லாமிய மத குரு தெரிவித்துள்ள கண்டனம் குறித்துகருத்து தெரிவிக்க டென்னிஸ் இளம் புயல் சானியா மிர்ஸா மறுத்து விட்டார்.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர். குறுகிய காலத்தில் மிகப் பெரும் புகழைப் பெற்றவர்.அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 4வது சுற்று வரை தகுதி பெற்று சாதனை படைத்தவர்.டென்னிஸில் மட்டுமல்லாமல் தான் அணியும் உடை, மூக்குத்தி, கண்ணாடி என மற்ற விஷயங்களிலும் இந்தியர்களை வெகுவாகவசீகரிக்கிறார் சானியா. அவரது மூக்குத்தியும், கண்ணாடியும் இன்றைய இளம்பெண்களின் பேஷனாக மாறியுள்ளது.
இந்த நேரத்தில், சானியா அணியும் உடைகள் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஒரு இஸ்லாமிய மதகுரு சமீபத்தில்தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். அபபோது, பெண்கள் குட்டைப் பாவாடை, கையில்லாத ஜாக்கெட்உள்ளிட்டவற்றை அணிய இஸ்லாம் மதம் அனுமதிக்கவில்லை. எனவே சானியா தனது உடைகள் விஷயத்தில் இவற்றைப்பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சானியா இப்பிரச்சினை குறித்து கருத்துவெளியிட்டுள்ளார். ஹைதராபாத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுகுறித்து நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.இந்த விவகாரத்தில் நான் தலையை நுழைக்க விரும்பவில்லை.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி எனக்கு மிகப் பெரிய அனுபவமாக அமைந்தது. பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.அங்கு எனக்கு எந்தப் பிரச்சினையும் வரவில்லை. குறிப்பாக இனவெறி சர்ச்சை எழவில்லை. எனது ஆட்டத்தை அவர்கள்ரசித்தார்கள்.
எனது டீ சர்ட்டில் எழுதப்பட்டிருந்த சில வாசகங்களை அங்குள்ள சிலர் படித்துப் பார்த்து ஜாலியாக கிண்டலடித்தார்கள்.
நான் முன்பு போல இப்போது சுதந்திரமாக வெளியே செல்ல முடிவதில்லை. எங்கு போனாலும் ரசிகர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள்.எனது ஆடை உள்பட அனைத்துயமே அவர்கள் கூர்மையாக கவனிக்கிறார்கள். இது எனக்கு வினோதமாக இருக்கிறது,இருப்பினும் இதை தவிர்க்க முடியாது என்றார் சானியா.












Click it and Unblock the Notifications