கேரளாவில் தமிழக பேருந்து எரிப்பு: 6 பேர் கைது
கொச்சி:
தமிழக அரசுப் பேருந்து எர்ணாகுளம் அருகே தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
எர்ணாகுளத்திலிருந்து சேலத்திற்குக் கிளம்பிய தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து, கமலசேரி என்ற இடத்தில் 5 பேர் கொண்டஆயுதம் தாங்கிய கும்பலால் கடத்தப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கி கைதாகியுள்ள கேரளாவைச் சேர்ந்த மக்கள்ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியின் ஆதரவாளர்கள்தான் இச்செயலில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்றுசந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பேருந்து எரிப்புச் சம்பவம் தொடர்பாக கேரள போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.இதுவரை 6 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். அவர்கள் யார், எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதுதெரியவில்லை. கொச்சி காவல்துறை ஆணையரின் நேரடி மேற்பார்வையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பேருந்து எரிப்புக்கும், தங்களுக்கும் சம்பந்தமில்லை என மக்கள் ஜனநாயகக் கட்சி கருத்த தெரிவித்துள்ளது.
கேரளாவில் தமிழக அரசுப் பேருந்து தீவைத்து எரிப்பு!












Click it and Unblock the Notifications