லஞ்சம் வாங்கும் இன்ஸ்பெக்டர்: ஏட்டு பரபரப்பு புகார்!
சென்னை:
சென்னை குரோம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஆயிரக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக, அதே காவல் நிலையத்தில்பணியாற்றும் தலைமைக் காவலர் புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குரோம்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருப்பவர் பாலசுப்ரமணியம். அதே காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக இருப்பவர் ரங்கநாதன். மிகவும் நேர்மையானவர், சமீபத்தில் கூட தனது உயிரையும் துச்சமென மதித்து ஒருகுற்றவாளியைப் பிடித்து உயர் அதிகாரிகளிடம் சபாஷ் பெற்றவர்.இந்த நிலையில் தலைமைக் காவலர் ரங்கநாதன், திங்கள்கிழமை காலை பணிக்கு வந்தார். வந்தவுடன் நேராக உதவி ஆய்வாளர்தங்கத்திடம் ஒரு புகார் மனுவை அளித்தார். அதில், ஆய்வாளர் பாலசுப்ரமணியம் பலரிடம் ஆயிரக்கணக்கில் லஞ்சம்வாங்குகிறார்.
காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு திருட்டு விசிடி விற்பனையாளரைப் பிடித்து விசாரித்தபோது, கடை உரிமையாளர்,தலைமைக் காவலர் பாலச்சந்தர் மூலம் ஆய்வாளருக்கு மாதம் ரூ. 7500 கொடுத்து வருவதாக தெரிவித்தார். அதேபோலஅனுமதியின்றி கிளப் நடத்தும் கோபி என்பவர் மாதம் ரூ. 37,000 கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
ஹோட்டலில் அனுமதியின்றி பார் நடத்தும் அதன் உரிமையாளர் ஆய்வாளருக்கு மாதம் ரூ. 18,500 தருவதாக தெரிவித்துள்ளார்.இதுதவிர, சாலையோரக் கடைகள் நடத்துவோர் ஆய்வாளருக்கு மாதம் தலா ரூ. 1000 லஞ்சமாக கொடுப்பதாகதெரிவித்துள்ளனர்.
எனவே இதுகுறித்து ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட உதவி ஆய்வாளர் தங்கம், புகாரைப் பதிவு செய்து கொண்டு அதை உயர்அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். ரங்கநாதனின் இந்தப் பகிரங்க புகார் மனு சென்னை காவல்துறை வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications