கேப்டனின் மனைவிக்கு மரியாதை!
மதுரை:
விஜயகாந்த்தின் மதுரை மாநாட்டில் அவரது மனைவி பிரேமலதாவுக்கு ரசிகர்கள் மிகுந்த முக்கியத்துவமும், மரியாதையும் அளிக்கின்றனர்.
விஜயகாந்த்தின் திரையுலக வளர்ச்சிக்கு பெரும் ஆக்கமும், ஊக்கமுமாக இருந்தவர் பிரேமலதா. இதை விஜயகாந்த்தே பலமுறைகூறியுள்ளார். இந்த நிலையில் இப்போது விஜயகாந்த் எடுத்துள்ள அரசியல் அவதாரத்திற்கும் பிரேமலதா பெரும் பக்க பலமாக இருந்துவருகிறார்.அரசியல் மாநாடு தொடர்பான அனைத்துப் பணிகளிலும், ஆலோசனைகளிலும் மனைவிக்கு முக்கியத்துவம் அளித்து அவரதுகருத்துக்களையும் விஜயகாந்த் கேட்கிறார். இது மாநாட்டு திடலிலும் எதிரொலித்தது.
மாநாட்டுத் திடல், மேடை அலங்காரம், வரவேற்பு வளைவுகள் என அனைத்திலுமே பிரேமலதாவின் ஆலோசனைகளும் அடங்கியுள்ளன.மேலும் கட்சியில் மகளிரணிக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறும் விஜயகாந்த்தை பிரேமலதா கேட்டுக் கொண்டுள்ளாராம்.
மாநாட்டு கண்காட்சி அரங்கில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் படங்கள் பலவற்றில் கூடவே பிரேமலதாவும் இருக்கிறார். மொத்தத்தில்,மற்ற தலைவர்கள் போல மனைவியை வீட்டிலேயே இருக்க வைத்து விட்டு தாங்கள் மட்டும் அரசியலில் ஈடுபடாமல், கூடவேமனைவியையும் பொதுச் சேவைக்கு விஜயகாந்த் இழுத்து வந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications