பட்டுத் துணிகளுக்கு கூடுதல் தள்ளுபடி: ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அண்ணா பிறந்த நாளையொட்டி பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்கு 10 சதவீத சிறப்பு தள்ளுபடியை முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அண்ணாவின் 97வது பிறந்த நாளையொட்டி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள்மூலம் விற்பனை செய்யப்படும் பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்கு 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
2006ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை இந்த சிறப்புத் தள்ளுபடி அமலில் இருக்கும். தற்போதுள்ள 20 சதவீத தள்ளுபடியுடன்சேர்த்து இந்த சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும்.
இந்தத் தள்ளுபடி மூலம் கைத்தறி பட்டு மற்றும் பருத்தி துணிகளின் விற்பனை அதிகரிக்கும். நெசவாளர்களுக்கு தொடர்ந்துவேலை வாய்ப்பு கிடைக்கும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications