மாநகராட்சி அலுவலகத்தில் அதிமுக கவுன்சிலர் தீக்குளிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திற்கு முன்பு தீக்குளிக்க முயன்ற அதிமுக கவுன்சிலரை போலீஸார் தடுத்துக்காப்பாற்றினர்.

சென்னை மாநகராட்சியின் 39வது வார்டு உறுப்பினர் பன்னீர்செல்வம். வியாழக்கிழமை காலை பன்னீர்செல்வம் கையில்மண்ணெண்ணை டின்னுடன் மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் கட்டடத்திற்கு வந்தார்.

அங்குள்ள ஆணையர் விஜயக்குமர் அலுவலகத்தை நோக்கி வேகமாக சென்ற அவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீவைக்க முயன்றார். இதைப் பார்த்த அங்கிருந்த போலீஸார் விரைந்து சென்று பன்னீர்செல்வத்தைக் காப்பாற்றி அவர்மீது தண்ணீரை ஊற்றினர்.

தீக்குளிக்க முயன்றது தொடர்பாக ஆணையர் விஜயக்குமாருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் பன்னீர்செல்வம். அதில், சென்னைமாநகராட்சி சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் பல கோடி செலவில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை 16ம் தேதிமுதல்வர் திறந்து வைக்கிறார்.

இதுதொடர்பான நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பிதழ் வரவில்லை. மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் சாதாரண நிகழ்ச்சிக்குக் கூடஉறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படுது. ஆனால் முதல்வர் கலந்து கொள்ளும் மிகப் பெரிய நிகழ்ச்சிக்கு எனக்குஅழைப்பிதழ் தரப்படவில்லை. இதில் உள்நோக்கம் உள்ளது.

மேலும், மேம்பால ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டு குற்றப்பத்திரிக்கை சாட்டப்பட்ட கவுன்சிலர் ராமமூர்த்தி என்பவரை விழாஏற்பாட்டுக் குழுவுக்குப் பொறுப்பாளராக நியமித்துள்ளனர். இது மற்ற உறுப்பினர்கைள அவமதிப்பது போலாகும்.

முதல்வர் விழாவுக்கு எனக்கு அழைப்பிதழ் அனுப்பாததைக் கண்டித்து தீக்குளிப்பதாக அதில் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

மாநகராட்சி அலுவலகத்தில் அதிமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+