அன்பு! அறம்! ஆற்றல்!
மதுரை:
விஜயகாந்த் ஆரம்பித்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் கொள்கைகளை விஜயகாந்த் விரிவாகவிளக்கியுள்ளார்.
தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அளவில் நமது கட்சி புதிய எழுச்சியை, அத்தியாயத்தைப்
படைக்கும்.
லஞ்சம், ஊழல் அறவே இல்லாத மாநிலமாக தமிழகத்தை உயர்த்துவதே நமது லட்சியம்.
ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து தீவிரவாதத்தை அடியோடு வேரறுக்க பாடுபடுவோம்.
தண்ணீர்ப் பிரச்சினை, பற்றாக்குறையை சரி செய்வதற்கு நீர் ஆதாரங்கள் அனைத்தையும்
தேசியமயமாக்க வேண்டும்.
அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகம் , புதுவை ஆகிய மாநிலங்களோடு இணக்கமான
சூழலை ஏற்படுத்தப் பாடுபடுவோம்.
அண்டை மாநிலங்களில் வீணாகும் தண்ணீரை தமிழகத்திற்கு வாங்க நடவடிக்கைகள் எடுப்போம்.
மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நகரம், கிராமம் என்று பார்க்காமல் அனைவருக்கும் வழங்க
வேண்டும்.
இருக்க இடம், உணவு, சுகாதாரமான குடிநீர், தடையில்லாத மின்சாரம், தரமான கல்வி கிடைக்க
பாடுபடுவோம்.
மொழிக் கொள்கையில் மாற்றம் கொண்டு வருவோம். முதலில் தாய் மொழி, விரும்பினால் வேறு
மொழிகளைப் படிக்கலாம்என்பதுதான் நமது கொள்கை. அதேபோல பொது மொழியான ஆங்கிலமும்
அவசியம். தமிழுக்குத் துணை போவோம், பிற மொழி கற்க தடையாக இருக்க மாட்டோம்.
சுய தொழிலை ஊக்குவிப்பேன். ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பில் தமிழகத்தை முதன்மை
மாநிலமாக மாற்றிக் காட்டுவேன்.
விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விளை பொருளுக்கு நல்ல விலை என்பதை
உறுதிப்படுத்துவேன். விவசாயத்தை நவீனப்படுத்துவேன்.
எனது கட்சியின் முக்கிய முழக்கம் அன்பும், அறம், ஆற்றல்.