ஹஜ் கோட்டா: மத்திய அரசுக்கு த.மு.மு.க. நன்றி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்திலிருந்து ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதற்குதமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திலிருந்து ஹஜ் யாத்திரைமேற்கொள்வதற்காக விண்ணப்பித்தவர்களிலிருந்து குலுக்கல் முறையில் பயணம் செல்லவிருப்பவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.இதன் காரணமாக பல நூறு இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை செல்வது தடைபடும் நிலை உருவானது. எனவே தமிழகத்திலிருந்துவிண்ணப்பித்துள்ள அனைவருக்கும் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி வழங்கப்பட வேண்டும் என மாநில அரசுக்கும், மத்தியஅரசுக்கும் வலியுறுத்தினோம்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதியும் இதுதொடர்பாக மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.இதை ஏற்று விண்ணப்பித்த அனைவருக்கும் யாத்திரை செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக மத்தியஅரசுக்கும், முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, கூட்டணிக் கட்சியினர் அனைவருக்கும் எங்களது நன்றிகள் என்றுகூறியுள்ளார் ஜவாஹிருல்லாஹ்.












Click it and Unblock the Notifications