சுனாமி நிதி காசோலைகளில் மோசடி இல்லை: தமிழக அரசு
சென்னை:
சுனாமி நிவாரண நிதிக்கு கொடுக்கப்பட்ட ரூ. 15 கோடி பணத்திற்கான காசோலைகள் திரும்பி வரவில்லை என்று தமிழக அரசுமறுத்துள்ளது.
தமிழக முதல்வரிடம் சுனாமி நிவாரணமாக கொடுக்கப்பட்ட ரூ. 15 கோடிக்கான காசோலைகள், சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக்கணக்குகளில் பணம் இல்லாததால் திரும்பி வந்து விட்டதாக சமீபத்தில் செய்தி வெளியானது.இதில் ஒரு முக்கிய தமிழ் நடிகரின் காசோலையும் அடங்கும் எனவும் கூறப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும்ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த செய்தியை தமிழக அரசின் நிதித்துறை மறுத்துள்ளது.
இதுதொடர்பாக நிதித்துறைச் செயலாளர் ஞானதேசிகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ரூ. 15 கோடிக்கான சுனாமிநிவாரண நிதி காசோலைகள் திரும்பி வந்து விட்டதாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மை இல்லை. அப்படி எந்தகாசோலையும் திரும்பி வரவில்லை.
பொதுமக்களின் பேராதரவுடன் ரூ. 155.41 கோடி அளவுக்கு சுனாமி நிதியாக பெறப்பட்டது. இதில் மிகவும் குறைந்ததொகையிலான காசோலைகள் மட்டுமே, சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் இல்லாத காரணத்தால்திருப்பப்பட்டுள்ளன. ரூ. 15 கோடி அளவுக்கான காசோலைகள் திரும்பி விட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை.
மேலும், எந்த ஒரு நடிகரின் காசோலையும் திருப்பி அனுப்பப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.