சமையல் எரிவாயு பற்றாக்குறை: ஜெ. பாய்ச்சல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்திற்கான சமையல் எரிவாயு ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்து விட்டதால்தான் வீடுகளுக்கு போதிய அளவுக்கு காஸ்சிலிண்டர்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது சத்துணவுத் திட்டம் தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமிபதிலளித்தார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.ஜி.விநாயகமூர்த்தி, சத்துணவுக் கூடங்களில் தற்போது சமையலுக்காக விறகுபயன்படுத்தப்படுகிறது. அதை சேகரிப்பதற்கும், வாங்குவதற்கும் பல்வேறு சிரமங்கள் உள்ளன.

எனவே, சத்துணவு சமையல் கூடங்களில் விறகுக்குப் பதில் சமையல் எரிவாயுவை பயன்படுத்தும் எண்ணம் அரசுக்கு உண்டா என்றுகேட்டார்.

அதற்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, அடுப்பில் சமைத்து உணவுதான் உடலுக்கும், விருந்துக்கும் நல்லது என்று பெரியவர்கள்சொல்வார்கள். தற்போது தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு ஒதுக்கீட்டை மத்திய அரசு வெகுவாக குறைத்துவிட்டது. இதனால், தற்போது வழங்கப்பட்டு வரும் வாடிக்கையாளர்களுக்குக் கூட முழுமையாக காஸ் வழங்க முடியவில்லை.

புதிய இணைப்புகள் கொடுப்பதையும் நிறுத்தி வைத்து விட்டனர். இந்த நிலையில், தமிழகத்திற்கான காஸ் ஒதுக்கீட்டை மத்திய அரசுஅதிகரித்தால் நிச்சயம் சத்துணவுக் கூடங்களுக்கும் காஸ் இணைப்புகள் வழங்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+