வனத்துறையினருக்கும் ரேஷன் பொருட்கள்?
சென்னை:
வனத்துறையினருக்கும் ரேஷனில் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதாதெரிவித்துள்ளார்.
தமிழக போலீஸாருக்கு மாதம் தோறும் ஒருமுறை ரேஷனில் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.அதேபோல வனத்துறையினருக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி சட்டசபை உறுப்பினர் சூரியகலா (அதிமுக) சட்டசபையில் இன்று கேள்விஎழுப்பினார். அதற்கு உணவுத்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் பதிலளிக்கையில், அம்மாதிரியான எண்ணம் தற்போதைக்குஅரசிடம் இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சூரியகலா, காவல்துறையினர் போலவே வனத்துறையினரும் கடுமையாக உழைக்கிறார்கள், பல்வேறுஇன்னல்களை சந்திக்கிறார்கள். எனவே அவர்களுக்கும் ரேஷன் மூலம் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று கோரிக்கை விடுத்தார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, உறுப்பினர் நல்ல யோசனையைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உரிய முறையில்பரிசீலித்து ஆவண செய்யப்படும் என்றார். இதையடுத்து முதல்வருக்கு சூரியகலா நன்றி தெரிவித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications