For Daily Alerts
Just In
2 வழக்குகளில் திருமாவளவனுக்கு முன்ஜாமீன்
சென்னை:
கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.
சிதம்பரம் அருகே உள்ள குமரகுடி என்ற இடத்தில் கடந்த 1997ம் ஆண்டு நடந்த பொதுக் கூட்டத்தில் கலவரத்தைத் தூண்டும்வகையில் பேசியதாக திருமாவளவன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணையில்தொடர்ந்து திருமாவளவன் ஆஜராகாததால், திருமாவளவனுக்கு எதிராக சிதம்பரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.இதேபோல மேலும் 2 வழக்குகளிலும் திருமாவளவனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்துஇவ்வழக்குகளில் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு தாக்கல்செய்தார்.
இதில் ஒரு வழக்கில் திருமாவளவன் பெயர் சேர்க்கப்படவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துமற்ற 2 வழக்குகளிலும் திருமாவளவனுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி முருகேசன் உத்தரவிட்டார்.
Comments
Story first published: Friday, September 23, 2005, 5:30 [IST]