செல்போன் ஷாக்: வாலிபரின் காது செவிடானது
Subscribe to Oneindia Tamil
கோவை:
செல்போனில் ஷாக் அடித்ததால் அதைப் பயன்படுத்தியவருக்கு காது செவிடானது.
கோயம்புத்தூர் அருகே உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் பாண்டி (33). மில் அதிபரான இவர் செல்போனை சார்ஜரில் மாட்டி,சார்ஜ் ஏற்றியடிபடி அதில் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது செல்போன் பேட்டரியில் இருந்து கசிந்த மின்சாரம் பாண்டியின் காதைத் தாக்கியது. இதில் அவரது காதுபுண்ணாகிவிட்டது, மேலும் வலிப்பும் ஏற்பட்டது. இதனால் அவரது ஒரு காது கேட்கும் திறனை இழந்துவிட்டது. மேலும்முகத்தின் ஒரு பகுதியும் நாக்கும் இழுத்துக் கொண்டன.
மின்சாரம் பாய்ந்ததில் செல்போனின் ஸ்பீக்கரும் கருகிவிட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பாண்டிக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
எவ்வளவு அவசரமாக இருந்தாலும் சார்ஜரில் மாட்டியபடி செல்போனை உபயோகிக்காதீர்கள்.












Click it and Unblock the Notifications