காவலர் தேர்வுக்கு தடை இல்லை: நீதிமன்றம்
சென்னை:
தமிழகம் முழுவதும் அக்டோபர் 1ம் தேதி நடைபெறவுள்ள காவலர் எழுத்துத் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என சென்னைஉயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் காவலர் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு 2 முறை நடந்தது. இரண்டு முறையும் வினாத்தாள்கள் முன் கூட்டியேவெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் பலர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவலர் தேர்வில் நடந்தமுறைகேடுகள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.
தற்போது 3வது முறையாக அக்டோபர் 1ம் தேதி காவலர் தேர்வு மீண்டும் நடைபெறவுள்ளது. இந் நிலையில் காஞ்சிபுரத்தைச்சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில், மீண்டும் காவலர் தேர்வு நடத்தக் கூடாது. அத்தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ரவிராஜ பாண்டியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜராகி தலைமைவழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன், ஏற்கனவே காவலர் தேர்வு தொடர்பான வழக்கு டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணையில் உள்ளது.அந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே தற்போதைய மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்றுவாதாடினார்.
அவரது வாதத்தை ஏற்ற நீதிபதி, மனுதாரரின் கோக்கையை ஏற்க மறுத்தார். மேலும், முந்தைய வழக்கில் தீர்ப்பு வெளியானபிறகு, மனுதாரரின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications