சென்னை நட்சத்திர ஹோட்டலில் ஆபாச பார்ட்டி: 2 பேர் கைது
சென்னை:
சென்னை பார்க் ஷெரட்டன் ஹோட்டலின் பாரில் நடந்த படு ஆபாசமான டான்ஸ் பார்ட்டியைத் தொடர்ந்து அந்த ஹோட்டலின்இரு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாப்பூரில் உள்ள இந்த ஹோட்டலில், சென்னையில் இயங்கும் பல எம்.என்.சி. நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குபார்ட்டிகள் நடத்தப்படுகின்றன. வார இறுதியில் நடக்கும் இந்த பார்ட்டிகளில் போதையேற்றிக் கொண்டு உடைகளைக்கலைந்துவிட்டு ஆண், பெண் ஊழியர்கள் கும்மாளம் போடுவது வழக்கமாகி வருகிறது.கடந்த வாரத்தில் நடந்த ஒரு பார்ட்டில் ஆபாசம் எல்லை மீறியது. இந்த பார்ட்டியை படம் பிடித்த சிலர் அந்தப் படங்களைபத்திரிக்கைகளுக்கு வழங்கினர்.
ஆண், பெண் ஊழியர்கள் சிறிய மேலாடையுடன் மெளத் கிஸ் அடிப்பது, பெண்கள் கட்டிப் பிடித்துக் கொண்டு மது குடிப்பதுஉள்பட எல்லை மீறிய படங்கள் அதில் அடக்கம். அதில் பிரசுரிக்கத்தக்க வகையில் இருந்த குறைந்த ஆபாசப் படங்களை மட்டும்பத்திரிக்கைகள் வெளியிட்டன. இதில் இடம் பெற்றிருந்தவர்களில் பெரும்பாலோனார் வட இந்தியர் பெண், ஆண்களே.
இந் நிலையில் இந்தப் பார்ட்டியை நடத்தப்பட்ட ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜஸ்ட் டிரஸ்ட் என்ற அமைப்பைச்சேர்ந்த ஜெபராஜ் என்பவர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து அந்த ஹோட்டலின் மதுபான, உணவுப் பிரிவின் இணை மேலாளர் வினோத் பாபு (35), வரவேற்பாளர்ஹிலாஸ் (22) ஆகியோரை நேற்றிரவில் கைது செய்தனர்.
ஆபாச பார்ட்டி நடத்தியது, லைசென்ஸ் இல்லாமல் பார் நடத்தி மதுபானம் வினியோகித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் அந்தஹோட்டல் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மயிலாப்பூர் துணை கமிஷ்னர் கலியமூர்த்தி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இருவரும் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications