திமுகவினருக்கு லஞ்சம்: கடித ஆதாரம் காட்டிய அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட சாலைப் பணியாளர்கள், லஞ்சம் கொடுத்தே அந்தப் பணியில் சேர்ந்ததாக கூறியுள்ளதமிழக அரசு அதற்கு ஆதாரமாக சாலைப் பணியாளர்கள் சிலர் எழுதிய கடிதத்தைக் காட்டியுள்ளது.தமிழக சட்டசபையில் செவ்வாய்க்கிழமை விவாதம் நடந்தபோது, வனத்துறை அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் ஒருகடிதத்தைக் காட்டி பேசினார். அப்போது, திமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட சாலைப் பணியாளர்கள், திமுகவினருக்குலஞ்சம் கொடுத்தே அந்தப் பதவியைப் பெற்றனர் என்றார்.
அதற்கு ஆதாரமாக சில கடிதங்களையும் அவர் காட்டி, அவற்றைப் படித்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு எழுதியகடிதங்களும் தங்களிடம் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.












Click it and Unblock the Notifications