தங்கருக்கு ஒரு நீதி, குஷ்புவுக்கு ஒரு நீதியா? பாமக கேள்வி

Subscribe to Oneindia Tamil

திண்டிவனம்:

தங்கர்பச்சான் அநாகரீகமாக பேசி விட்டார் என்று கொதித்து, கொந்தளித்து, அவரை நடிகர் சங்கத்திற்கு வரவழைத்து காலில்விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த நடிகர் சங்கம், குஷ்பு விவகாரத்தில் தனக்கு சம்பந்தமில்லை என்று கூறி ஒதுங்கிக்கொண்டது ஏன் என்று பாமக கேள்வி எழுப்பியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நல்லியகோடன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தங்கர்பச்சான் தெரிவித்த கருத்து தொடர்பாக, தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் பண்பாட்டை காப்பதற்காகவே பிறவிஎடுத்ததைப் போல ஆர்ப்பரித்தனர். அவர் வெளியில் மன்னிப்பு கேட்ட பிறகும் அவரை நடிகர் சங்கத்திற்கு நேரில் வரவழைத்துமன்னிப்பு கேட்க வைத்தனர்.

அந்த சங்கத்திற்கும், சங்கத் தலைவருக்கும் என்ன ஆயிற்று? நடிகை குஷ்பு கற்பின் இலக்கணம் இதுதான் என்று அறிவித்துள்ளார்.ஒரு இயக்குனர், நடிகையைப் பற்றிக் கருத்து சொன்னால் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம், அறிக்கை போர் நடக்கிறது. ஆனால் ஒருநடிகை, ஒட்டுமொத்த தமிழ்ப் பெண்களையும், படித்த ஆண்களையும் கேவல்பபடுத்தி பேட்டி கொடுத்தால் நடிகர் சங்கம்ஆழ்கடல் அமைதி காக்கிறது.

தங்கர்பச்சான் பத்திரிக்கை வாயிலாக மன்னிப்பு கேட்டபோது நடிகர் சங்கத்தினர் திருப்தி அடையவில்லை. நடிகர் சங்கத்திற்குநேரில் வரவழைத்து, காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்தனர்.

இப்போது குஷ்பு மட்டும் டிவியில் மன்னிப்பு கேட்டால் போதுமா? தங்கர்பச்சானுக்கு ஒரு நீதி, குஷ்புவுக்கு ஒரு நீதியா? என்றுகேள்வி எழுப்பியுள்ளது பாமக.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+