நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம்: வங்கிகள், மத்திய அரசு அலுவலங்கள் இயங்காது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பல்வேறு தொழிற்சங்களின் சார்பில் நாளை நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்ளின் பணிகள் பெருமளவில்பாதிக்கப்படவுள்ளன. இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக போக்குவரத்து ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கவுள்ளதால் பஸ்போக்குவரத்தும் பாதிக்கப்படவுள்ளது.லாரிகளின் சேவையும் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
மேலும் விமானத்துறை ஊழியர்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் இன்றிரவு முதல் விமான சேவையும் மிகப் பெரும் அளவில்பாதிக்கப்படவுள்ளது.
பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது. இந்த வேலை நிறுத்தத்துக்கு மத்தியஅரசு ஊழியர் சங்கம், வங்கி ஊழியர் சங்கம், தபால் துறை ஊழியர் சங்கம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் ஆகியவை முழு ஆதரவுதெரிவித்துள்ளன.
இதனால் விமான, ரயில் போக்குவரத்தும் கூட பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொலைத் தொடர்பு சேவையும்பாதிக்கப்படலாம்.












Click it and Unblock the Notifications