குஷ்பு தற்கொலைக்கு முயன்றதாக பகீர் வதந்தி
சென்னை:
நடிகை குஷ்பு தற்கொலைக்கு முயன்றதாக இன்று வதந்தி பரவியது.
கற்பு விவகாரத்தில் அவர் தெரிவித்த கருத்தால் பெரும் சிக்கலில் மாட்டியுள்ள குஷ்புவுக்கும் அவரது மகனுக்கும் இன்று பிறந்ததினமாகும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பிறந்த நாளைக் கொண்டாட விரும்பாத குஷ்பு குடும்பத்தினர் வீட்டிலேயேமுடங்கிக் கிடந்தனர்.அவர்களுக்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் தொலைபேசி மூலம் வாழ்த்துக்களைத் தெவித்தனர்.
இந் நிலையில் குஷ்பு தற்கொலை செய்ய முயன்றதாக சென்னையில் புரளி பரவியது. வெகு வேகமாக இத் தகவல் தமிழகம்முழுவதும் பரவியது.
இதையடுத்து பத்திரிக்கை அலுவலகங்கள், டிவி நிலையங்கள், இணையத் தளங்களின் அலுவலகங்களைத் தொடர்பு கொண்டுபலரும் இந்தத் தகவல் உண்மையா என்று விசாரித்தனர்.
இதற்கிடையே குஷ்பு மீதான மக்களின் கோபத்தைத் தணிக்க சினிமாத்துறையைச் சேர்ந்த சிலர் வேண்டுமென்றே இந்தவதந்தியைப் பரப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
குஷ்பு கொடும்பாவி எரிக்க முயற்சி:
இதற்கிடையே நடிகை குஷ்புவைக் கண்டித்து சென்னை விருகம்பாக்கத்தில் அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்ற தமிழ்த்திருநாடு வீடு, நிலம், மனை தரகர்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்த 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.
குஷ்புவுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து கொண்டுள்ளது. இன்றும் அவரைக் கண்டித்து சென்னையில் போராட்டம்நடைபெற்றது.
தமிழ்த் திருநாடு வீடு, நிலம், மனை தரகர்கள் நலச் சங்கத்தின் சார்பில் அமைப்பின் தலைவர் கண்ணன் தலைமையில் 20 பேர்விருகம்பாக்கம் பகுதியில் ஊர்வலமாகசென்று உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.