ஓகேனக்கலை பாதுகாக்க போராட்டக் குழு
ஓகேனக்கல்:
சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஓகேனக்கல் பகுதியில் தமிழக அரசு அமைத்துள்ள கம்பி வேலிகளை தகர்த்து எறிந்து போராட்டம்நடத்தப் போவதாக கன்னடர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் ஓகேனக்கல்லில் உள்ள பல பகுதிகளை தங்களுக்குச் சொந்தமானது என கர்நாடக அரசு கூறி வருகிறது.இதனால் அங்கு சர்ச்சை ஏற்பட்டுள்ளது.சில நாட்களுக்கு முன்பு கர்நாடகத்தின் சாம்ராஜ் நகர் மாவட்ட கன்னடர் சங்கம் சர்ச்சைக்குரிய பகுதியில் ஊடுறுவ முயன்றது.ஆனால் தமிழக பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டதால் அவர்கள் உள்ளே வருவதைத் தவிர்த்துவிட்டனர்.
இந் நிலையில் மீண்டும் சர்ச்சைக்குரிய பகுதிக்குள் ஊடுறுவி, தமிழக அரசு சுற்றுலாப் பயணிகள் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ளகம்பித் தடுப்பு வேலிகளை உடைத்து எறியப் போவதாக கன்னடர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தங்களது போராட்டத்தின்போது ஏதாவது விபரீதம் நடந்தால் அதற்கு தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் தான் பொறுப்பேற்கவேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஓகேனக்கல்லில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இதற்கிடையே, தமிழகத்தில் திமுக தலைமையில் ஓகேனக்கலைக் காக்கும் போராட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பெண்ணாகரத்தில் திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், பாமக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள்ஆகியவற்றின் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் கூடி இதுதொடர்பாக விவாதித்தனர்.
ஓகேனக்கல் தமிழகத்திற்குச் சொந்தமானது. அதை விட்டுக் கொடுக்க முடியாது என்று "க் கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications