For Daily Alerts
Just In
இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 11 கோடி ஹெராயின் பறிமுதல்
சென்னை:
ராஜஸ்தானில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ரூ. 11 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பெங்களூர் அருகேகைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூர், சென்னை வழியாக இந்த ஹெராயின் இலங்கை கொண்டு செல்லப்படவிருந்தது.
இந்தக் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து தென் மண்டல போதைத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பெங்களூர்-தும்கூர்தேசிய நெடுஞ்சாலையில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஹெராயினுடன் வந்த லாரி பிடிபட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 11.3 கோடியாரும்.
லாரியில் வந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
Comments
Story first published: Sunday, October 2, 2005, 5:30 [IST]