For Quick Alerts
For Daily Alerts
Just In
கேரளா: எம்எல்ஏவை ஏமாற்றிய தஞ்சை போலி சாமியார்
தஞ்சை:
கேரளாவில் எம்எல்ஏவிடம் மோசடி செய்த தஞ்சையைச் சேர்ந்த சங்கிலி பாபா என்ற போலிச் சாமியார் கைது செய்யப்பட்டார்.
தஞ்சையை சேர்ந்த இந்த சங்கிலி பாபா பல்வேறு சித்து வேலைகள் செய்து அங்குள்ள மக்களை மோசடி செய்து வந்தார். இதுகுறித்து எழுந்த புகாரின் பேரில் போலீசார் பாபாவிடம் விசாரனை நடத்தினர். இதையடுத்து சாமியார் அங்கிருந்து தப்பிகேரளாவில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.இந்த நிலையில் கேரளாவில், அம் மாநில எம்.எல்.ஏ. முகமது அலியை சந்தித்த சாமியார் தன்னை மத்திய அரசின் உள்துறைச்செயலாளர் என்று அறிமுகம் செய்து கொண்டு அவரை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்துள்ளார்.
முதலில் ஏமாந்த எம்எல்ஏ பின்னர் உண்மை தெரிந்ததும் போலீசில் புகார் செய்தார்.
இதை தொடர்ந்து கேரள போலீசார் சங்கிலி பாபாவை கைது செய்து விசாரனை நடத்தினர். அதில், இவர் போலீசாருக்கு பயந்துதஞ்சையில் இருந்து தப்பி வந்தது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் இவரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.
Comments
Story first published: Monday, October 3, 2005, 5:30 [IST]