ஜெயேந்திரர்: குருமூர்த்தி மீதான வழக்கில் குற்றச்சாட்டு பதிவு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
ஜெயேந்திரர் விவகாரத்தில் போலீசாருக்கு எதிராக கட்டுரைகள் எழுதிய ஆடிட்டர் குருமூர்த்தி மீதான வழக்கில் குற்றச்சாட்டுகள்பதிவு செய்யப்பட்டன.தனது கட்டுரைகளில் தவறான தகவல்களைத் தந்து ஜெயேந்திரர் வழக்கை திசை திருப்ப முயன்றதாக அவர் மீது போலீசார்தொடர்ந்த வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதில் கடந்த ஜூலை 25ம் தேதி குருமூர்த்திக்கு குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. 3 முறை இந்த வழக்கு விசாரணைநடந்தபோதும் அவர் ஒரு முறை கூட நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தற்போது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதையொட்டி குருமூர்த்தி நீதிமன்றத்தில்ஆஜரானார். குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுவிட்டதால், இனி சாட்சிகள் விசாரணை விரைவில் தொடங்கிவிடும்.












Click it and Unblock the Notifications