கராத்தேவின் பினாமிகளிடம் விசாரணை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கராத்தே தியாகராஜனின் பினாமிகளிடம் போலீசார் நடத்தி வரும் விசாரணையில் அவர் குவித்துள்ள சொத்துக்கள் குறித்த பலவிவரங்கள் வெளி வந்துள்ளன.சென்னை தவிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பினாமிகளின் பெயரில் தியாகராஜன் சொத்துக்களை வாங்கிப்போட்டுள்ளது தெரிய வந்ததால், அவர்களைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கராத்தே எங்கே இருக்கிறார் என்று தெரியாத நிலையில், அவரது சொத்துக்கள் குறித்து விசாரிக்க ஆரம்பித்துள்ள போலீசார்,அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தால், அவற்றை முடக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே கராத்தே நேபாளத்துக்கு தப்பியோடிவிட்டதாகவும் ஒரு தகவல் வந்துள்ளது.












Click it and Unblock the Notifications