2 அமெரிக்கர்கள், ஜெர்மன் விஞ்ஞானிக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு
Subscribe to Oneindia Tamil
ஸ்டாக்ஹோம்:
2005ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த இருவருக்கும் ஜெர்மனைச் சேர்ந்த ஒருவிஞ்ஞானிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களான ராய் ஜே. கிளவ்பர், ஜான் எல். ஹால் மற்றும் ஜெர்மனைச் சேர்ந்த தியோடர் ஹேன்ஸ்க் ஆகியோருக்கு இந்தவிருது வழங்கப்படுகிறது.
லேசர் ஆப்டிக்ஸ் மற்றும் குவாண்டம் தியரி குறித்த இவர்களது ஆராய்ச்சிகளுக்காக இந்த விருதுக்கு இவர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
அணுக்கள், மூலக்கூறுகளின் நிறங்களை சிறிதும் பிசகில்லாமல் கண்டறிய இவர்களது ஆராய்ச்சிகள் உதவியுள்ளன. மேலும் மிகநுணுக்கமான லேசர் கதிர்களை உருவாக்க இவர்களது ஆராய்ச்சிகள் பெருமளவில் உதவும் என நோபல் பரிசை வழங்கும் ராயல்சுவீடிஸ் அகாடெமி கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications