For Daily Alerts
Just In
வேலூர் சிறையிலிருந்து பெண் கைதி தப்பியோட்டம்
வேலூர்:
வேலூர் மத்திய சிறையிலிருந்து பெண் கைதி தப்பியுள்ளார்.சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த மெகபூப் பாட்சா என்பவரது மனைவி பர்கானா (20). காஞ்சிபுரத்தில் நடந்த ஒரு திருட்டுவழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறை வளாகத்தில் உள்ள குழாயில் தண்ணீர் பிடிக்க 10 கைதிகளை போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அப்போதுபோலீசாரிடம் இருந்து நழுவி பர்கானா தப்பியோடிவிட்டார்.
அவரைத் தேடிப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Tuesday, October 4, 2005, 5:30 [IST]