ஜெவின் அடுத்த சலுகை.. காஞ்சி பட்டு நெசவாளர்களுக்கு..
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேர்தல் கால சலுகைககளின் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் தனியார் பட்டு நெசவாளர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வைஅறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.இதன்படி தனியார் பட்டு நெசவாளர்கள் ஒரு பாவு நெசவு செய்ய (அதாவது மூன்று புடவைகள் நெய்ய) ரூ. 270 கூடுதலாகவழங்கப்படும். இதுவரை ரூ. 902 வழங்கப்பட்டு வந்தது. இதை ரூ. 1,172 ஆக உயர்த்தி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் 60,000 நெசவாளர்கள் பலனடைவர். 1995ம் ஆண்டுக்குப் பின் இப்போது தான் இவர்களுக்கு ஊதிய உயர்வு அமல்செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி வரிசையாக பல்வேறு தரப்பினருக்கும் சலுகை மழை பொழிந்து வருகிறார் ஜெயலலிதாஎன்பது குடறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications