நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கள்ள மார்க்கெட்டில் ஜோர் விற்பனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நாடு முழுவதும் சமையல் எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

சென்னை, பெங்களூர் உள்பட பல நகர்களில் கள்ள மார்க்கெட்டில் சிலிண்டர்கள் இரண்டு மடங்கு விலைக்குவிற்கப்பட்டு வருகின்றன.

இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், ஐ.பி.பி. ஆகிய நிறுவனங்கள் ஆண்டுதோறும் 1.5 கோடி டன் சமையல் எரிவாயு சப்ளை செய்து வருகின்றன.

கடந்த சில மாதங்களாக சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. சர்வதேச சந்தையில் எண்ணைவிலைக்கு கடும் உயர்வு ஏற்பட்டதன் காரணமாகவும், ரிலையன்ஸ் நிறுவன எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள்முடப்பட்டதன் காரணமாகவும் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.

இந்தியா முழுவதுமே காலியான சிலிண்டருக்கு பதில் புதிய சிலிண்டர் பெறுவதில் ஒரு வாரம் முதல் 3 வாரம் வரைகால தாமதம் ஏற்படுகிறது.

இருந்தாலும் தட்டுப்பாட்டை சமாளிக்க 5.65 லட்சம் டன் சமையல் காஸ் இறக்குமதி செய்ய எண்ணை நிறுவனங்கள்முடிவு செய்துள்ளன.

தீபாவளி பண்டிகை காலமான அடுத்த மாதத்தில் சமையல் கியாஸ் தட்டுப்பாடு காரணமாக 8.50 கோடிகுடும்பங்கள் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச விலை உயர்வு ஒரு காரணமாக இருந்தாலும், காஸ் டீலர்கள் பொது மக்களுக்கு வழங்க வேண்டியசிலிண்டர்களை கள்ளச் சந்தையில் விற்றுத் தின்ன ஆரம்பித்துள்ளனர்.

வீடுகளுக்கு வழங்க வேண்டிய சிலிண்டர்களை கடைகளுக்கு விற்று வரும் இவர்கள், பொது மக்களிடம் 2 மடங்குபணம் வாங்கிக் கொண்டு முறைகேடாக சிலிண்டர்களை விற்று வருகின்றனர்.

இது குறித்த புகார்களை எண்ணெய் நிறுவனங்களும் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றன. காஸ்ஏஜென்சிகாரர்களிடம் இருந்து இந்த நிறுவன அதிகாரிகளுக்கு மாமூல் போய் விடுவதே இதற்குக் காரணமாகும்.

சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பையில் காஸ் ஏஜென்சிகள் செயற்கையான காஸ் தட்டுப்பாட்டை ஏற்படுத்திகொள்ளை லாபம் அடித்து வருகின்றனர்.

இது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் கூறுகையில்,

கள்ள மார்க்கெட்டில் சிலிண்டர்கள் விற்கப்படுவதை தடுக்க சில கட்டுப்பாடுகளை விதித்தோம், அதன் விளைவுஎதிர்மறையாகிவிட்டது.

வீடுகளுக்கான சிலிண்டர்களை கடைகளுக்கு கள்ள மார்க்கெட்டில் விற்பது மிகப் பெரிய குற்றம். இதைஉடனடியாகத் தடுக்க வேண்டும் என்றார்.

இந்த மாதம் மட்டும் 1 லட்சம் டன் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் சிலிண்டர்வினியோகிப்பாளர்கள் புதிய சிலிண்டர்களைப் பதிவு செய்யப் போகும் பொது மக்களிடம் அலட்சியம் காட்டிவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+