ராமேஸ்வரம் கோவிலில் மோசடி: 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்- 6 பேர் இடமாற்றம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் புனித தீர்த்த கிணறுகளில் நீராட அனுமதி டிக்கெட்டுகள் விற்கப்பட்டதில் நடந்தமுறைகேடுகள் தொடர்பாக கோவில் ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று பேர் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் இந்தக் கோவிலில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்ட் நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.91,000 பறிமுதல்செய்யப்பட்டது.

22 தீர்த்த கிணறுகளில் நீராட தேவஸ்தானம் ரூ. 7 மட்டும் கட்டணமாக நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் தேவஸ்தானஊழியர்களும் வெளி நபர்களும் கூட்டு சேர்ந்து கொண்டு பக்தர்களிடம் ரூ. 100, ரூ. 1,000 என்று இஷ்டம் போல சுரண்டிவந்தனர்.

இது தொடர்பாக வந்த புகார்களையடுத்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு ராமேஸ்வரம் கோயிலில் திடீர் சோதனை நடத்தியது. இதில்4,000 போலி டிக்கெட்டுகள், ரூ. 91,000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டன.

இது தவிர, கோவிலின் அலுவலகத்தில் ரூ. 1 லட்சம் வரை பணம் காணாமல் போயிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்துதேவஸ்தான காவலர் ராமசாமி கைது செய்யப்பட்டார்.

இந் நிலையில் கோவில் ஊழியர்களான துரை, சப்தகிரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாலசந்திரன்,நாகப்பாண்டி, கலைச் செல்வன், முத்துக்குமார், முனியசாமி, சுப்பிரமணியன் ஆகிய 6 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+