ஜெவுக்கு ராமதாசின் எலிக்கறி நினைவூட்டல்
சென்னை:
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதில் நாட்டிலேயே தமிழகம் 3வது இடத்தில் இருக்கிறது. இது தான் விவசாயிகளுக்கு ஜெயலலிதாசெய்துள்ள சாதனையா என்று பாமக தலைவர் ராமதாஸ் கேட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பல கோடி அரசுப் பணத்தை செலவு செய்து நேரு விளையாட்டு அரங்கில் விவசாயிகள் மாநாட்டை நடத்தியுள்ளார் ஜெயலலிதா. இதில்விவசாயிகளின் வட்டிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
நடந்தது விவசாயிகள் மாநாடே அல்ல. அதிகாரிகளும் அதிமுகவினரும் அரசுப் பணத்தில் பஸ்களை ஏற்பாடு செய்து சென்னைக்குஆட்களைக் கூட்டி வந்து நடத்திய மாநாடு. இது ஒரு போலியான விவசாயிகள் மாநாடு என்பதால் தான் வட்டிக் கடன் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளதாக பொய்யான தகவலை துணிந்து சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.
இந்த அறிவிப்பு எந்த அளவுக்கு உண்மையானது என்பது விவசாயிகளுக்குத் தெரியும். கடன் தள்ளுபடி என்பது முதல்வரின் ஏமாற்றுவேலை.
நானும் ஒரு விவசாயிகள் தான் என்றும் விவசாயிகள் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளதாகவும் ஜெயலலிதாபேசியிருக்கிறார். இதே ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டு உயிர் பிழைக்க வேண்டி இருந்தது என்பதைநாடறியும்.
ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஜுரம் அடிக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் தான் விவசாயிகள் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார். கடன்சுமையால் குடும்பத்தோடு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் 3வது இடத்தில் இருக்கிறது. இது தான் அதிமுக அரசின்சாதனை.
இந்த ஆட்சியை அகற்றினால் தான் விவசாயிகளுக்கு உண்மையான நிவாரணம் கிடைக்கும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications