பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர், ஆப்கானில் ஆயிரக்கணக்கில் பலி
இஸ்லாமாபாத்:
இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாகிஸ்தான் நாடே ஒட்டு மொத்தமாக அதிர்ந்துள்ளது. அதே போல ஆப்கானிஸ்தானின் பெரும்பாலானபகுதிகளும் நில நடுக்கத்தால் குலுங்கின.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாக் மாவட்டத்தில் பாலாகோட் மண்டத்தில் இருந்த பல கிராமங்கள்இருந்த தடமே இல்லாத அளவுக்கு அழிந்து போய்விட்டன. அங்கு வசித்த நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.இஸ்லாமாபாத்தில் 19 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. இப் பகுதியைத் தாக்கிய நிலநடுக்கத்தின்அளவு 7.4 முதல் 7.6 வரை இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
ராவல்பிண்டியில் பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழுந்து குழந்தைகள் காயமடைந்தனர். பாகிஸ்தானால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளஆக்கிரமிப்பு காஷ்மீரில் தான் பெரும் உயிர்த் சேதம் ஏற்பட்டுள்ளது. லாகூரில் மார்க்கெட் பகுதியில் கடைகள் இடிந்து விழுந்ததில் பலர்பலியாயினர்.
பாகிஸ்தானின் பல பகுதிகளிலும் சாலைகள் சேதமடைந்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் குவெட்டா, காபூல் உள்ளிட்ட நகர்கள் இந்த நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பங்க்ராமில் உள்ள அமெரிக்கராணுவத் தளத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டபோதும் உயிரிழப்பு ஏதும் இல்லை.
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் வீடு இடிந்ததில் 2 குழந்கைள் பலியாகியுள்ளனர். இந்த இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கக்கில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.