இந்தியா, பாகிஸ்தானுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல்
டெல்லி:
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கும் என்றுஅமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் காண்டலீஸ்ஸா ரைஸ் தெரிவித்துள்ளார்.
வெளியுறுவுத்துறை அமைச்சர் நட்வர் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரைஸ், இந்தியாவுக்கு நிவாரணஉதவிகளை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் இந்தியாவில் ஏற்பட்டுள்ளபொருள் மற்றும் உயிர் சேதத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.இதற்கிடையே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு பிரிட்டன் 1 லட்சம்பவுண்டு நிதியுதவி வழங்கியுள்ளது. மேலும் 50 மீட்புப் பணியாளர்களையும் அனுப்பியுள்ளது.
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், இந்தியாவுக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களும் இரங்கல்தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தங்களது பிரார்த்தனைகளைத் தெரிவிப்பதாகஅமெரிக்க அதிபர் புஷ் மற்றும் அவரது மனைவி தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய அதிபர் புதின் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், ஜம்மு மற்றும் காஷ்மீரில்நிலநடுக்கத்தால் எண்ணற்ற குடும்பங்கள் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையும், அதிர்ச்சியும்அடைந்தேன்.
அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதே போல் ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் தமது இரங்கலில், இந்த ஈடு செய்ய முடியாதஇழப்புக்காக மிகவும் வருந்துகிறேன், இயற்கை சீற்றத்தால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனதுஅனுதாபங்களைத் தெவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications