கோவை: பாறை உருண்டு விழுந்து 4 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையில் கன மழைக்கு பாறை உருண்டு விழுந்து 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

தமிழகம் முழுவதும் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. கோவையிலும் கன மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் கல்லுக்குழி என்ற இடத்தில் கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பெரிய பாறை ஒன்றுஉருண்டு குடிசைப் பகுதியில் விழுந்தது.

இதில் குடிசை வீட்டில் இருந்த நான்கு பேர் உடல் நசுங்கி இறந்தனர். இவர்களில் குப்பம்மாள், மாரத்தாள் ஆகியஇரு பெண்களின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. ராஜன், மங்கம்மாள் ஆகியோரது உடல்கள் இன்னும்மீட்கப்படவில்லை. இருவரது உடல்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு நசுங்கி விட்டது.

இந்த சம்பவத்தில் ரங்கநாதன் என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாறைஉருண்டு விழுந்ததால் 14 குடிசைகள் சேதமடைந்துள்ளன.

சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டதும், அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், செ.மா. வேலுச்சாமி, தாமோதரன்,கோவை மேயர் மலரவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துக்கம் விசாரித்தனர். காயமடைந்தரங்கநாதனை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டுள்ள 14 குடும்பங்களுக்கு அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும்வழங்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+