கேஸ் சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்தது: 4 சிறுவர்கள் பலி
சென்னை:
சென்னையில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில், கட்டிடம் இடிந்த விழுந்து 4 சிறுவர்கள் பலியானார்கள்.
எம்.ஜி.ஆர். நகர் சூளை பள்ளம் அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் ராமு. இவர் காலி பெயிண்ட் டப்பாக்களைவாங்கி விற்கும் தொழில் செய்கிறார். வீட்டின் மேல் மாடியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.கீழ்தளத்தில் உள்ள வீட்டில் ராஜேந்திரன் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவர்களின் வீட்டிற்குபின் பக்கம் ஏராளமான பேர் குடிசைகளில் வசித்து வந்தனர்.
ராஜேந்திரன் வேலைக்கு சென்றவுடன், அவரது மனைவி பானு சமையல் செய்து முடித்து விட்டு கேஸ் சிலிண்டரைமூடாமல் சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் சமையல் கியாஸ் கசிந்து வீடு முழுவதும் நிரம்பியிருந்தது.
இது தெரியாமல், வீட்டிற்கு வந்த ராஜேந்திரன் மின்சார சுவிட்சை போட்டார். உடனே வீட்டிற்குள் பரவியிருந்தகேஸ் குபீர் என தீப்பிடித்தது. அடுத்த கணமே சமையல் கேஸ் சிலிண்டரும் வெடித்து சிதறியது.
ராஜேந்திரன் வீட்டில் பற்றிய தீ பக்கத்தில் உள்ள பெயிண்ட் டப்பாக்காளின் குடோனுக்கு பரவியது. இதனால்ராஜேந்திரன் வீட்டு பின் பக்க சுவர், குடோனின் பின் பக்க சுவர்கள் ஒரே நேரத்தில் இடிந்து குடிசைகளின் மீதுவிழுந்தது.
அங்கு குடிசை வீட்டு குழந்தைகள் சுவரையொட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அதனால் சுவரின்இடிபாடுகளில் சிக்கி ராஜா(வயது 12), அரி (வயது 11), முனியப்பன் (வயது 4), வெங்கடேசன் (வயது 13) ஆகிய4 சிறுவர்கள் இறந்தனர்.
சுவர் இடிந்து விழுந்த தெரு குறுகலாக இருந்ததால் தீயணைப்பு படையினரும், போலீசாரும் இடிபாடுகளை அகற்றசிரமப்பட்டனர். பிறகு புல்டோசர் மூலம் இடிபாடுகளை அகற்றி இறந்த சிறுவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாகமீட்கப்பட்டன.
இது தொடர்பாக, அனுமதி பெறாமல் பாதுகாப்பற்ற முறையில் வீடு கட்டியுள்ள அந்த வீட்டின் உரிமயாளர் ராமுஎன்பவரை எம்.ஜி.ஆர். நகர் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications