For Daily Alerts
Just In
3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை
சேலம்:
மேட்டூர் அணை இந்த ஆண்டில் 3வது முறையாக நிரம்பியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீறின்றி வறட்சியில் மிதந்த மேட்டூர் அணை இந்த ஆண்டு அபமிதமான தண்ணீரைப்பெற்று வருகிறது.கர்நாடகத்தில் நல்ல மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிக அளவில் இருந்தது. இதனால் இந்தஆண்டில் முதல் முறையாக கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அணை நரம்பியது.
இதையடுத்து மீண்டும் செப்டம்பர் 15ம் தேதி அணை நிரம்பியது. இந்தச் சூழ்நிலையில் சமீப நாட்களாக மீண்டும்மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகத்தது.
இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவில் மேட்டூர் அணை மூன்றாவது முறையாக நிரம்பி விவசாயிகளைமகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
அணையின் நீர் மட்டம் 120 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 25,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியுள்ளதால் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Comments
Story first published: Wednesday, May 18, 2005, 5:30 [IST]