For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அண்ணியை கற்பழித்து கொன்ற கொழுந்தன்

By Staff
Google Oneindia Tamil News

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே அண்ணியை கற்பழித்து கொன்ற கொழுந்தன் கைது செய்யப்பட்டார்.

திப்பணபட்டியைச் சேர்ந்த பச்சைமால் (வயது 34). இவரது மனைவி தாமரைச்செல்வி (வயது 30). பீடி சுற்றும்தொழிலாளி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

பச்சைமால் போர்வெல் டிரைவராக உள்ளார். இவருடன் அதே ஊரைச் சேர்ந்த முருகன் (வயது 27) என்பவரும்போர்வெல் லாரியில் பணியாற்றி வந்தார். முருகனுக்கு பச்சைமால் அண்ணன் முறை வேண்டும்.

இதனால் பச்சைமால் வீட்டுக்கு முருகன் அடிக்கடி வருவது வழக்கம். முருகனுக்கு 2 மனைவிகள். முதல் மனைவிகருத்துவேறுபாடு காரணமாக தமது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் பச்சைமால் இல்லாத நேரங்களில் முருகன் தாமரைச் செல்வி வீட்டுக்குச் சென்று தவறானநோக்கத்தோடு பேசியுள்ளான். இதை அவர் கண்டித்துள்ளார். மேலும் பச்சைமாலும் முருகனை கண்டித்துள்ளார்.

இருப்பினும் முருகன் தாமரைச்செல்வியை எப்படியாவது அடைய சமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்தான்.

இந்த நிலையில் பச்சைமால் நெல்லைக்கு புறப்பட்டு சென்றது தெரிந்து கொண்ட முருகன் அவர் வீட்டிற்கு சென்றுதாமரைச் செல்வியை தனது தோட்டத்தில் உள்ள காய்கறி மூட்டையை தூக்கி வர வேண்டும் அதற்கு உதவிசெய்யும்படி கேட்டுள்ளான்.

அதை நம்பிய தாமரைச் செல்வியும் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்றதும் தன் ஆசைக்கு இணங்குமாறுதாமரைச் செல்வியை முருகன் வற்புறுத்தியுள்ளான். அவர் சம்மதிக்க மறுக்கவே கயிற்றால் கையை பின் பக்கம்கட்டிப்போட்டு கற்பழித்துள்ளான்.

தாமரைச் செல்வி கூச்சல் போடவே அவரது சேலையால் முரட்டுத்தனமாக வாயில் திணித்துள்ளான். இதில் மூச்சுத்திணறிய தாமரைச் செல்வி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து முருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

பின்னர் கிராம நிர்வாக அதிகாரியிடம் நடந்ததை கூறி சரண் அடைந்தான். இதையடுத்து அவன் போலீசாரிடம்ஒப்டைக்கப்பட்டான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X