பிஇ: கல்லூரிகளில் அழகி போட்டிக்கு தடை
சென்னை:
பொறியியல் கல்லூரிகளில் அழகிப் போட்டி நடத்த அண்ணா பல்கலைக் கழகம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியதாவதுபொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பில் கவனத்தை சிதற விடாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளைமேற்கொள்ளப்பட்டன. முதல் கட்டமாக செல்போன் கல்லூரிகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பிறகுஉடைக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.
அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதைச் சார்ந்த கல்லூரிகளில் நடக்கும் கலாசார நிகழ்ச்சிகள் நமதுபண்பாட்டை காக்கும் விதமாக சினிமா பாடல்களுக்கு ஆபாசமாக ஆடுவது அதிகரித்து வந்தது. மேலும் நடனம்ஆடுவதற்கு ஒத்திகை என்ற பெயரில் வகுப்புகளைப் புறக்கணிப்பதும் படிப்பில் கவனம் சிதறுவதுமாக இருந்தது.
எனவே சினிமா பாட்டுக்கு ஏற்றபடி நடனம் ஆட தடைவிதிக்கப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக அண்ணாபொறியியல் கல்லூரி மற்றும் அதனை சார்ந்த அனைத்து கல்லூரிகளிலும் அழகி மற்றும் ஆடை அலங்கார போட்டிநடத்த தடை விதிக்கப்படுகிறது.
மேலும் 30 சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அந்த கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து கல்லூரிகளில் போமான வசதியுள்ளதா என்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் அந்தக் கல்லூரிகள்போதிய வசதிகள் செய்து உள்ளதா என்பது பற்றி ஆய்வு நடத்த அண்ணா பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்றபேராசிரியர்கள் கொண்ட 90 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் மோசடி தொடர்பாக 43 மாணவர்களைப் போலீஸ் கைது செய்துள்ளது. அந்த மாணவர்கள் மீதுஅண்ணா பல்கலைக் கழகத்தின் குழு நடத்திய விசாரணை அறிக்கையை சிண்டிகேட் விசாரித்து நடவடிக்கைஎடுக்கும்.
மாணவர்களுக்க வீடியோ கான்பரன்ஸ் மூலம் பாடம் நடத்தும் திட்டம் முதல் கட்டமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் விரைவில் அறிமுகமாகும் என்றார் வ்ஸவநாதன்.












Click it and Unblock the Notifications