கிருஷ்ணசாமி மீது திருமாவளவன் தாக்கு
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திமாவளவன் கிருஷ்ணசாமி மீது உறவை முறித்து விட்டார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் பாமகவும் விடுதலை சிறுத்தைகள் இயக்கமும் அங்கம் வகிக்கறது. இதன் மூலம் வடமாவட்டங்களில் இன மோதல்கள் தடுக்கப்பட்டுள்ளது.
எனக்கும் ராமதாசுக்கும் உள்ள ஒற்றுமையை பொறுக்க முடியாமல் எங்களுக்குள் கருத்து வேறுபாட்டை உருவாக்கசிலர் முயற்சித்தனர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் டாக்டர் கிருஷ்ணசமியை எங்கள் அணிக்கு அழைத்தோம். முதலில் மறுத்தார். திமுககூட்டணியில் அவருக்கும் இடமில்லை என ஆன பிறகு என்னை தொடர்பு கொண்டார்.
நானும் அவரும் சேர்ந்து மக்கள் கூட்டணி அமைத்தோம். எங்கள் உறவு எதிர் காலத்திலும் தொடரும் என்றுகிருஷ்ணசாமி கூறினார்.
அவர் கட்சியினர் போட்டியிட்ட தொகுதிகளில் நான் பிரச்சாரம் செய்தேன். ஆனால் அவர் எங்கள் கட்சிபோட்டியிட்ட தொகுதிகளில் பிரச்சாரம் செய்யவில்லை.
அதன் பிறகு கண்டதேவி பிரச்சினையில் திருமாவளவன் எப்படி தலையிடலாம் என்று என்னை கண்டித்தார். ஆவர்மீது வெடிகுண்டு வீசிய செய்தி கேட்டு மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். ஆனால் நான் வரக் கூடாது என்றுஅவர் கூறிவிட்டார்.
தேர்தலுக்கு பிறகு கூட்டணி தொடரக்கூடாது என்று கிருஷ்ணசாமி சொல்வதுண்டு அதை விடுதலைசிறுத்தைகளிடம் நடைமுறைப்படுத்துகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று திருமாவளவன் கூறினார்.












Click it and Unblock the Notifications