மேட்டூர் அணைக்கு ஆபத்தில்லை: பொதுப் பணித்துறை
சேலம்:
மேட்டூர் அணைக்கு அபரிமிதமான தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணை உடையும் ஆபத்து ஏதும் இல்லை என்றுபொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்குவிநாடிக்கு 2 லட்சம் கன அடி என்ற அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டுள்ளது.இதனால் மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 2.30 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. கடல் போல காணப்படும்மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டள்ளதால் அப்பகுதியே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாகும். ஆனால் அணையில் தற்போது 121.85 அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. இதனால்அணை உடையலாம் என்ற பீதி மேட்டூர் பகுதியில் நிலவுகிறது. ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதை மறுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கூறுகையில், மேட்டூர் அணையின் மொத்த நீர் இருப்பு 120 அடிதான்என்றாலும் கூடுதலாக 5 அடி வரை அதாவது 125 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம். தற்போது அணையில் 121.85அடிதான் நீர் உள்ளது.
அணைக்கு வரும் நீர் அத்தனையும் அப்படியே திறந்து விடப்படுகிறது. எனவே அணை உடையும் என்ற பேச்சுக்கே இடமில்லை.எனவே பொதுமக்கள் அணை உடையுமோ என்று அஞ்சத் தேவையில்லை என்றனர்.
44 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 2.30 கன அடி என்ற அளவுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications