For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்கெங்கும் தண்ணீர்: கண்ணீர் வெள்ளத்தில் மக்கள்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஓகேனக்கல் ஆற்றில் தொடர் வெள்ளம்
காவிரிக் கரையோர மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளும் தண்ணீரில் மிதக்கின்றன. உயிர்கள், உடமைகளைஇழந்து மக்கள் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.

காவிரி ஆறு கடந்த சில நாட்களாக பேயாட்டம் போட்டு பல ஊர்களை நாசப்படுத்தி வருகிறது. கரையோரத்தில் உள்ள 11மாவட்டங்களைச் சேர்ந்த பல ஊர்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தர்மபுரி தொடங்கி திருச்சி, தஞ்சை வரையிலான காவிரிக் கரையோரப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்பாதிக்கப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் தண்ணீராக இருப்பதோடு, பல கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கி பிற பகுதிகளிலிருந்துதுண்டிக்கப்பட்டு தீவுகளாகியுள்ளன.

உடமைகள், உயிர்களை இழந்து பல்லாயிரணக்கான மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்டமக்களுக்குத் தேவையான உணவு, அத்தியாவசியப் பொருட்களை தொடர்ந்து வினியோகித்து வருகின்றனர்.

ஈரோட்டில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை பாலத்தில் இருந்து மக்கள் பார்த்தனர்
திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் மட்டும் 20,000 குடிசைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. மாநிலம் முழுவதும்சுமார் 10 லட்சம் பேர் உடமைகளை இழந்துள்ளனர். இவர்கள் ஆங்காங்கே சமூகக் கூடங்கள், திருமண மண்டபங்களில்வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு உணவு, உடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சேலம், நாமக்கல், திருச்சி, ஈரோடு, கரூர், தஞ்சாவூர்,புதுக்கோட்டை, நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன.

மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் தமிழக அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X