வீராணம் ஏரி உடையும் அபாயம்
கடலூர்:
வீராணம் ஏரி உடைந்து விடாமல் தடுப்பதற்காக ஏரிக்கு வரும் கொள்ளிடம் ஆற்று நீரை வேறு பகுதிக்குத் திருப்பி விடநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ளது வீராணம் ஏரி. இந்த ஏரிக்கு காவியிலிருந்துதான் பெருமளவு நீர் வருகிறது. தற்போது காவிரியில்வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதால் வீராணம் ஏரிக்கும் பெருமளவில் நீர் வந்து ஏரி நிரம்பி வழிகிறது.காவிரியின் துணை நதியான கொள்ளிடம் ஆற்றிலிருந்துதான் வீராணம் ஏரிக்குத் தண்ணீர் வரும். ஏரி நிரம்பி வழிவதால்ஏரிக்கரைகள் பலவீனமடைந்து உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடி தலைமையில் அதிகாரிகள் ஏரிப் பகுதியில் முகாமிட்டு, கரைஉடையாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
முதல் கட்டமாக ஏரிக் கரைகளில் ஆயிரக்கணக்கான மணல் மூடைகள் போடப்பட்டு பலப்படுத்தப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக ஏரிக்கு வரும் நீரை திருப்பி வேறு பகுதிக்கு மாற்றி விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொள்ளிடம் ஆற்றிலிருந்து வடவாறு மூலமாக வீராணம் ஏரிக்கு வரும் நீர் தடுத்து நிறுத்தப்பட்டு வேறு பகுதி வழியாகதிருப்பி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
முன்னெச்சக்கை நடவடிக்கையாக ஏரியைச் சுற்றிலும் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குகொண்டு செல்லப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications