கேரளா: தமிழக பஸ் எரிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது
கொச்சி:
கேரளாவில் தமிழக அரசு பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதி இரவு கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கலமச்சேரி அருகே சேலம்நோக்கி வந்து கொண்டிருந்த தமிழக அரசு பஸ் துப்பாக்கி முனையில் கடத்தி தீவைத்து எரிக்கப்பட்டது.இது தொடர்பாக கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கோவைகுண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மதானியின்ஆதரவாளர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மதானியை ஜாமீனில் விடுதலை செய்ய வலியுறுத்தி தீவைப்புநடந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மதானி கட்சியை சேர்ந்த ஷெரீப் (வயது 25) எனபவனை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஷாபிர் (வயது 25) என்பவனையும் தற்போது இந்த வழக்குதொடர்பாக போலீசார் கைது செய்துள்ளனர்.
இவன் மதானி கட்சியின் முன்னாள் நிர்வாகி என்று கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு பஸ் எரிப்புவழக்கில் மேலும் பலரை போலீசார் தேடிவருகின்றனர்.