For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லி குண்டுவெடிப்பில் சென்னையைச் சேர்ந்தவர் சாவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

டெல்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவர் பலியாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவர் அனந்தராமன். 75 வயதாகும் இவர் சனிக்கிழமை பிற்பகலில் நடந்த டெல்லிகுண்டுவெடிப்பில் பலியாகியுள்ளார்.

அனந்தராமனின் மகன் டெல்லியில் தங்கியுள்ளார். அவரைப் பார்ப்பதற்காக மனைவி வசந்தாவுடன் பத்து நாட்களுக்கு முன்புடெல்லி சென்றுள்ளார் அனந்தராமன்.

கணவரும், மனைவியும் குண்டுவெடிப்பில் சிக்கியுள்ளனர். இதில் அனந்தராமன் இறந்து விட்டார். வசந்தா படு காயங்களுடன்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்த அனந்தராமன், ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்ஆவார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X