For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேவர் நினைவிடத்தில் கார்த்திக் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

By Staff
Google Oneindia Tamil News

பசும்பொன்:

Karhtik

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் நடிகர் கார்த்திக் அஞ்சலி செலுத்த வந்தபோது, அவரது ஆதரவாளர்களுக்கும், போலீஸாருக்கும்இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.

முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவரும், விரைவில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கவுள்ளவரும், சரணாலயம் அமைப்பின்தலைவருமான நடிகர் கார்த்திக், தனது ரசிகர்கள் புடை சூழ ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர்நினைவிடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார்.

தேவர் குரு பூஜையில் கலந்து கொண்ட அவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கார்த்திக்குடன் ஏராளமானரசிகர்களும் வந்ததால் அங்கு பரபரப்பும், இட நெருக்கடியும் ஏற்பட்டது.

இதையடுத்து கார்த்திக்கை மட்டும் நினைவிடத்திற்குள் அனுப்பிய போலீஸார் ரசிகர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசம் அடைந்தரசிகர்கள், போலீஸாரை எதிர்த்து கோஷமிட்டனர். அவர்களைத் தாக்கவும் முயன்றனர்.

இதையடுத்து ரசிகர்களை தடியடி நடத்தி போலீஸார் கலைத்தனர். பின்னர் கார்த்திக் திரும்பவும் வெளியே வந்தபோது ரசிகர்கள் அவருடன்சேர்ந்து அங்கிருந்து சென்றனர்.

இதேபோல தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரான நடிகர் விஜயகாந்த், சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர்சிலைக்கு மாலை அணிவித்தார். அவருடன் கட்சியின் பொதுச் செயலாளர் ராமு வசந்தனும் சென்று மாலை அணிவித்தார்.

மதுரையில் தான் நடத்திய மாநாட்டில் பல தலைவர்களின் படங்களை வைத்த விஜய்காந்த் தேவரின் படத்தை மட்டும் வைக்கவில்லை.இதனால் அவருக்கு தேவர் சமூகத்தினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

இந் நிலையில் பசும்பொன்னுக்கு அவர் வந்தால் அவரை எதிர்த்துப் போராட்டம் நடத்தவும் சில முக்குலத்தோர் அமைப்பினர்திட்டமிட்டிருந்தனர். இதனால் அங்கு வருவதை விஜய்காந்த் தவிர்த்துவிட்டதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X