For Daily Alerts
Just In
ஜெ. அரசின் ஏமாற்று வேலை: ராமதாஸ் சாடல்
சென்னை:
எந்தவித நிதியாதாரம் இல்லாமல் வரிசையாக திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றிக் கொண்டுள்ளதுஅதிமுக அரசு என பாமக நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார்.
சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த நான்கரை ஆண்டுகளாக பல்வேறுதிட்டங்களையும், சலுகைகளையும் ரத்து செய்து வந்தது அதிமுக அரசு. தற்போது தினசரி ஒரு திட்டத்தையும்,சலுகையையும் அள்ளி வழங்கி வருகிறது.ஆனால் இந்தத் திட்டங்களை நிறைவேற்றத் தேவையான நிதியாதாரம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து அரசுவாய் திறக்க மறுக்கிறது. தேர்தலில் வாக்குகளைப் பெறவும், மக்களை ஏமாற்றவுமே இதுபோல வெற்றுத்திட்டங்களை அறிவித்து வருகிறது அதிமுக அரசு.
மக்களுக்குப் பயன் தரும் ஒரு திட்டம் இந்த ஆட்சியில் கொண்டு வரப்படவில்லை. இருந்ததை எல்லாம் ரத்துசெய்து விட்டு புதிதாக அறிவிப்பது போல அறிவித்து வருகிறார்கள்.
தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதுதொடர்பாக விரைவில் பிரதமர் உள்ளிட்டவர்களைசந்தித்து நேரில் வலியுறுத்தவுள்ளேன் என்றார் ராமதாஸ்.
Comments
Story first published: Thursday, November 3, 2005, 5:30 [IST]