வேதாரண்யத்தில் கடல் கொந்தளிப்பு

Subscribe to Oneindia Tamil

வேதாரண்யம்:

வேதாரண்யம் மற்றும் ராமேஷ்வரத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் தமிழக கரையோரத்தில் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு கடலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.பெளர்ணமி, அமாவாசை தினங்களில் கடலலைகளின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று(புதன்கிழமை) நள்ளிரவு 11 மணியளவில் வேதாரண்யத்தில் கடல் கொந்தளிப்புஏற்பட்டது. இதனால் கடல் நீர் பொங்கி ஊருக்குள் புகுந்தது. மேலும் 25க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் நீரால்சூழப்பட்டது.

நள்ளிரவில் தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டுவெளியே ஓடினார்கள். உடனே அவர்கள் மேடான பகுதிக்கு சென்று தங்கினார்கள்.

விடிய விடிய பயத்துடன் விழித்திருந்த அவர்கள் 2 மணி நேரத்திற்கு பிறகு கடல் நீர் பின் வாங்கியதை தொடர்ந்துதங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

ஆறு காட்டுதுறை, கோடியக்கரை பகுதியிலும் நேற்று கடல் நீர் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ஊருக்குள்புகுந்தது. வேதாரண்யயேஸ்வரர் கோவில் நாலுகால் மண்டபத்தையும் கடல் நீர் சூழ்ந்தது.

இதை தொடர்ந்து இன்று காலையும் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. விடிய விடிய மழையும் பெய்து வருவதால்வேதாரண்யம் கடற்கரையோர மக்கள் பீதியாகவே உள்ளனர்.

வேதாரண்யத்தை தொடர்ந்து ராமேஷ்வரத்திலும் பனைமர உயரத்துக்கு அலைகள் சீறிப் பாய்ந்தன. சிலஇடங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் மீனவ மக்களிடம் அச்சம் நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+