சில்லறை தராத கண்டக்டரைக் கடித்த பயணி
சென்னை:
சில்லறை பாக்கியைக் கொடுக்காத ஆத்திரத்தில் நடத்துநரின் கையைக் கடித்த பயணியை போலீஸார் கைதுசெய்தனர்.
சென்னை முகப்பேரிலிருந்து அண்ணா சதுக்கம் வரை செல்லும் நகரப் பேருந்தில் முரளி என்பவர் பயணித்தார்.அந்தப் பேருந்தின் நடத்துனராக மகேஷ் என்பவர் செயல்பட்டார்.அரும்பாக்கத்திற்கு டிக்கெட் வாங்கினார் முரளி. பணத்தைப் பெற்றுக் கொண்டு டிக்கெட்டைக் கொடுத்தநடத்துனர் பாக்கி சில்லறையை சிறிது நேரம் கழித்துக் கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் கூறியபடி அவர்தரவில்லை என்று தெரிகிறது.
இதுதொடர்பாக மகேஷுக்கும், முரளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முரளி,மகேஷின் இடது கையைப் பிடித்து பலமாக கடித்து விட்டார். வலியால் அலறித் துடித்த மகேஷ், பேருந்தை நேராகதிருமங்கலம் காவல் நிலையத்திற்கு விடக் கூறி கதறினார்.
இதையடுத்து பேருந்து காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்ஸ்பெக்டரிடம் புகார்கொடுத்தார் மகேஷ். இதைத் தொடர்ந்து நடத்துனரின் கையைக் கடித்த முரளி கைது செய்யப்பட்டார்.
40 வயதில் நாய் குணம் என்பார்கள். பயணி முரளிக்கும் 40 வயது தான் ஆகிறதாம். பழமொழியை நீரூபிக்கும்வகையில் அவர் நடந்து கொண்டது பேருந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.












Click it and Unblock the Notifications