கோலார் தங்க வயலில் நல அதிர்ச்சி
Subscribe to Oneindia Tamil
கோலார்:
கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் மிக மிக லேசான நில அதிர்ச்சி ஏற்பட்டது.
இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் கோலார் தங்க வயல் பகுதியில் நள்ளிரவில்நில அதிர்ச்சி ஏற்பட்டது.சில விநாடிகளே நீடித்த இந்த நில அதிர்ச்சி அடுத்தடுத்து நான்கு முறை ஏற்பட்டது. இதையடுத்து பீதியடைந்தமக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்தபடி வெளியேறினர்.
திறந்தவெளி மைதானங்களில் அவர்கள் விடிய விடிய தங்கினர். இந்த நில அதிர்வு குறித்து தேசிய பாறைகள்தொழில்நுட்பத் துறை இயக்குநர் குப்தா கூறுகையில், புதன்கிழமை இரவு 11.50, 1.45, அதிகாலை 5.50, 6.30 எனநான்கு முறை அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 2.05 ஆக மட்டுமே இருந்தது.
எனவே இது பூகம்பம் அல்ல. நிலத்துக்கடியில் பாறைகள் நகர்ந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியே இதற்குக் காரணம்.இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.












Click it and Unblock the Notifications