திமுகவினரால் பாமக பிரமுகர் வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே பாமக மற்றும் திமுகவினருக்கு இடையே நடந்த பயங்கர மோதலில் பாமக பிரமுகர்வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பெண்கள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.விழுப்புரம் அருகே கண்ணாரம்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் குலசேகரன். இவர் பாமகவைச் சேர்ந்தவர்.இவருக்கும், திமுகவினருக்கும் இடையே, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் இன்று இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் குலசேகரன் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர், அரிவாள்,கத்திகளால் வெட்டப்பட்டுக் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் விழுப்புரம், பாண்டிச்சேரி, சென்னை அரசு மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்ணாரம்பேட்டு கிராமத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால்,அங்கு அதிக அளவில்போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications